
மதுரை: மதுரை பாண்டி கோயில் சுற்றுச் சாலை முக்கிய சாலையாக மாறியுள்ளது. அதிக போக்குவரத்து மிகுந்த இச்சாலையின் முக்கியத்துவம் கருதி பாண்டி கோயில் அருகே சிவகங்கை சந்திப்பில் வாகன நெருக்கடியை தவிர்க்க, மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது.
சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த மேம்பாலத்திற்குகீழ் மெகா ரவுண்டானா உருவாக்கப்பட்டது. இதன்மூலம் சிகவங்கை - மதுரை நகருக்குள் செல்லும் வாகனங்களும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சிக்னல், நெருக்கடியின்றி நிற்காமல் செல்கின்றன. இது தவிர, தென் மாவட்டங்களில் இருந்து மேலூர், திருச்சி மார்க்கமாக செல்லும் வாகனங்களும், மேலூர் - ராமநாதபுரம், தென்மாவட்டங்களுக்கு போகும் அனைத்து வாகனங்களும் பாலத்திற்கு கீழே செல்லாமல் மேம்பாலத்தை பயன்படுத்திச் செல்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்