
புதுச்சேரி: பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் பெருமைதான் என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால சாதனைகள் குறித்து பயனடைந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்து பேசும் மக்கள் இயக்க நிகழ்ச்சி நடந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளே வியக்கும் வகையில் இந்தியாவை முன்னேற்றியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்