
புதுச்சேரி: புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று (ஜூன் 29ம் தேதி) நடைபெற்றது.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு ரூ.11.90 கோடிக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் அட்டைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: மீனவ சகோதரர்களுக்கும், மற்றவர்களுக்கும் மத்திய அரசு திட்டங்களை கொடுக்கிறது. அதற்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்குக்கு சென்று விடுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்