
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் வழக்கில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை கடந்த 14-ம் தேதி அதிகாலையில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்