
தருமபுரி: தருமபுரி அருகே விளைநிலத்தில் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிய வாகனத்தை கிராம மக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்திய நிலையில், மருத்துவக் கழிவுகளை அகற்ற தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் சிவாடி கிராமம் அருகே விவசாய நிலத்தில் உள்ள பயன்பாடற்ற கிணறு ஒன்றில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சேகரிக்கப்படும் பயோ கழிவுகள், மருத்துவ உபகரணக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகளை லாரியில் ஏற்றி வந்து கொட்டிச் செல்வதை அறிந்த அப்பகுதி மக்கள் நேற்றுமுன்தினம் (30-ம் தேதி) நள்ளிரவில் லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் தலையிட்டு கழிவுகளை கொட்டாமல் எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்