
திருநெல்வேலி/சென்னை: திருநெல்வேலி - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் உட்பட 11 மாநிலங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகளை காணொலி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. இதற்கிடையே, திருநெல்வேலி - சென்னை ரயிலுக்கான கட்டணம் அறிவிக்கப்பட்ட நிலையில், டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீபாவளிக்கு முந்தைய 3 நாட்களின் முன்பதிவு முடிந்தது.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் இன்று உதய்பூர்-ஜெய்ப்பூர், திருநெல்வேலி-சென்னை (மதுரை வழி), ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை (ரேணிகுண்டா வழி), பாட்னா-ஹவுரா, காசர்கோடு - திருவனந்தபுரம், ரூர்கேலா-புரி (புவனேஸ்வர் வழி), ராஞ்சி-ஹவுரா மற்றும் ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்