
மதுரை: அமைச்சர் உதயநிதிக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரங்கக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசிய பேச்சை அரசியலுக்காக இந்தியா முழுவதும் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சனாதனத்தை ஆதரிக்க சிலருக்கு உரிமை இருப்பது போல், அதை எதிர்ப்பதற்கும் உரிமை உண்டு.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்