
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில், பாம்பு கடித்த முதியவரை தூளி கட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பென்னாகரம் வட்டம் வட்டுவன அள்ளி ஊராட்சியில் அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களுக்கு இதுவரை போதிய சாலை வசதி ஏற்படுத்தப்படவில்லை. தனித்தனி மலை முகடுகளில் உள்ள இந்த கிராமங்களில் தலா 100 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த மலை கிராமங்களில் தொடக்கப் பள்ளி, மின்சாரம் ஆகிய இரு வசதிகளைத் தவிர மருத்துவம் போன்ற வசதிகள் எதுவும் கிடையாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்