
சென்னை: தவறான அர்த்தத்தில் ‘சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தாத போது ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை த்ரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகானுக்கு தேசிய மகளிர்ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து மணிப்பூர் விவகாரத்தில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு, குஷ்புவை அவதூறாக ஒருவர் எக்ஸ் தளத்தில் கூறியிருந்தார். அவருக்கு பதிலளித்தபோது, உங்களைப் போன்று சேரி மொழியில் என்னால் பேச முடியாது என குஷ்பு தெரிவித்திருந்தார். இதில் சேரி என்ற வார்த்தையை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்