
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 98 சதவீதம் நிவாரணம் சென்றுள்ளது. மேலும் 5 லட்சம் பேர் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு, உரிய வகையில் நிவாரணம் வழங்கப்படும். தென் மாவட்ட மக்களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது. நம் இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தை பின்பற்றும் மக்களும் ஒற்றுமையாக வாழும் நாடு.நாம் ஒற்றுமையாக சகோதரர்களாக உள்ளோம். இந்த ஒற்றுமைஉருவாவதை சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் எல்லா பிரிவு மக்களும் அமைதியாக வாழ்கின்றனர். இதை தடுக்கஒரு கூட்டம் தவியாய் தவிக்கிறது. ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் வெற்றி பெற முடியாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்