
மதுரை: இந்தியாவிலேயே முதல் முறையாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அலங்காநல்லூர் அருகே ரூ.44 கோடியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் மைதானத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடக்க உள்ளது. இந்த மைதான கட்டுமானப்பணியை டிசம்பரில் முடிக்க, இறுதிக்கட்டப் பணிகள் மிக தீவிரமாக நடக்கிறது.
வீர விளையாட்டு என்று அதன் பெயரில் மட்டுமல்லாமல், உயிரை கொடுத்து வீரத்தை நிரூபிக்கும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விளையாட்டில் பலர் உயிரிழந்தாலும் இந்த விளையாட்டின் ஆர்வமும், விறுவிறுப்பும் குறையாமல் பல தடைகளை தாண்டி நடக்கிறது. நூற்றாண்டுகளை கடந்து நடக்கும் இந்த விளையாட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் விளையாட்டாக கருதப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்