
சென்னை: புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர்.
மிக்ஜாம் புயல், கனமழை, வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மத்திய அரசிடம் நிவாரணமாக ரூ.5,060 கோடி கோரிய முதல்வர் ஸ்டாலின், ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 7-ம் தேதி சென்னை வந்து பாதிப்புகளை பார்வையிட்டு சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்