Monday, January 1, 2024

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/01/02/large/1177111.jpgஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்: கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி, கோயில்கள், தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஆங்கில புத்தாண்டு நேற்று வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு குடியிருப்பு வளாகங்கள், பொது இடங்களில் பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் புத்தாண்டைபொதுமக்கள் கொண்டாடினர். பரஸ்பரம் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதலேபல கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர்பகுதிகளில் உள்ள அனைத்து கோயில்களிலும் நேற்று அதிகாலை முதல் நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக, வடபழனி முருகன்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. பின்னர், வடபழனி ஆண்டவருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்துசுவாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கபாலீஸ்வரர், கற்பகாம்பாளை வழிபட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...