
சென்னை: ‘‘எனக்கு உடல்நலம் இல்லை. நான் உற்சாகமாக இல்லை என்ற செய்தியை படித்தபோது சிரிப்புதான் வந்தது. தமிழகமும், தமிழக மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது, எனக்குஎன்ன குறை’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அயலகத் தமிழர் நலன், மறுவாழ்வு துறை சார்பில் சென்னையில் 2 நாட்கள் நடந்த அயலகத் தமிழர் தின விழா நேற்று நிறைவடைந்தது. இதில், தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு, உள்ளிட்ட 8 பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். ‘எனது கிராமம்’ என்ற முன்னோடி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்