
நாகர்கோவில்: குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் சிவகுரு குற்றாலம்(66). இவர் நிலம் வாங்குவதற்காக நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவர் ஒருவரிடம் முன்பணமாக ரூ.1.50 கோடி பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆன பின்பும் நிலத்தை சிவகுரு குற்றாலத்திற்கு கொடுக்காமல் அவர் இழுத்தடித்துள்ளார். இதனால் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த சிவகுரு நாகர்கோவில் எஸ்.பி. அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தங்கவேலிடம்(52) புகார் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்