Monday, October 31, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/01/large/890383.jpgசிதம்பரம் அருகே கடற்கரையில் கிடைத்த மர்ம பொருள்: வனத்துறையினர் விசாரணை

கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்த குமார் என்பவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றார். அங்கு கல் வடிவில் மர்ம பொருள் கிடந்துள்ளது.

அதனை வீட்டிற்கு எடுத்து வந்து வைத்திருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர், அதனை தண்ணீரில் போட்ட போது அது மிதந்துள்ளது. இதனை அவர், சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் தெருவில் உள்ள தனது நண்பரான பொற்கொல்லர் முத்துக்குமரனிடம் கொடுத்துள் ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/01/large/890603.jpgஉள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை, பகுதி சபை கூட்டங்கள்: பம்மலில் மக்களிடம் குறைகளை கேட்கிறார் முதல்வர்

சென்னை: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் 12,525 கிராமங்களில் கிராமசபை கூட்டமும், நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளில் பகுதி சபை கூட்டமும் இன்று நடைபெறுகிறது. சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் நடக்கும் பகுதி சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்கிறார். தமிழகத்தில் உள்ள 12,525 கிரா மங்களிலும் குடியரசு தினம் (ஜன.26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.15), காந்தி ஜெயந்தி (அக்.2) ஆகிய நாட்களில் கிராமசபை கூட்டம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நவ.1-ம் தேதி உள்ளாட்சி தினத்தன்றும் கிராமசபை கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

வேளாண் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில், கிராமசபை கூட்டம்போல, நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் வார்டு தோறும், அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு கமிட்டி அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பங்களிப்புடன் பகுதி சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் முதன்முதலாக பகுதி சபை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் 6-வது வார்டில் நடை பெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பகுதி சபை கூட்டங்களை தொடங்கி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/01/large/890464.jpgசென்னையில் நாளை பள்ளி மாணவர்களுக்கான விநாடி - வினா போட்டி: என்எல்சி, ‘இந்து தமிழ் திசை' இணைந்து நடத்துகின்றன

சென்னை: என்எல்சி, 'இந்து தமிழ் திசை' இணைந்துபள்ளி மாணவர்களுக்கான 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்' விநாடி-வினா போட்டியை சென்னையில் நாளை நடத்துகின்றன. நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான 'கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்' அக்.31 முதல் நவ.6-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் ஆகியவை இணைந்து 'ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்' என்ற கருப்பொருளில் பள்ளி மாணவர்களுக்கான விநாடி-வினா போட்டிகளை நடத்தி வருகின்றன. ஏற்கெனவே திருச்சி, மதுரை, கோவைஆகிய மாநகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக இப்போட்டி சென்னையில் அடையார் காந்திநகரில், கோட்டூர்புரம் ரயில் நிலையம் பின்புறம் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நாளை (நவ.2) நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டி தொடங்கும் முன்பும் முன்பதிவு செய்யலாம். 5 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 8.30 மணிக்கும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிற்பகல் 12.30 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். இப்போட்டி தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற 8838567089 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/01/large/890578.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு - கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ திட்டம்

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், முபின் வீடு உள்ளிட்ட இடங்களில் மீண்டும் சோதனை நடத்தவும் என்ஐஏ முடிவு செய்துள்ளனர்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்தது. இதில், காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின்(25) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடி பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள், வயர்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/890161.jpgகனமழை | சென்னை உட்பட 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சென்னை: கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பரவலாக மழையும் எனவும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (அக்.31) கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, October 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889710.jpgசெங்கல் சிவபார்வதி கோயிலின் 111 அடி உயர சிவலிங்கத்துக்கு உலக சாதனை விருது

நாகர்கோவில்: களியக்காவிளை அருகே கேரள மாநிலம் செங்கல் பகுதியில் மகேஸ்வரன் -சிவபார்வதி கோயில் அமைந்துள்ளது. கேரள மாநில சிற்பக் கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் கருவறையில் சிவன், பார்வதி அருட் காட்சி தருகின்றனர். கருவறையின் அருகில் கணபதி, முருகன் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கருவறையை சுற்றிலும் 12 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயில் கன்னி மூலையில் கணபதி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விநாயகரின் 32 பாவனைகளை குறிக்கும் வகையில் 32 கணபதி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889962.jpgபவானி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 மாணவர்களை தேடும் பணி தீவிரம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ படித்து வருபவர்கள் சுரேந்திரன், ராஜதுரை, கனீஷ்க். இதில் கனீஷ்க் சென்னையைச் சேர்ந்தவர். மற்ற இருவரும் கோவையை சேர்ந்தவர்கள். இவர்கள் உட்பட 10 மாணவர்கள் நேற்று மேட்டுப்பாளையத்துக்கு வந்தனர். மாம்பட்டி என்ற இடத்துக்குச் சென்ற மாணவர்கள் பவானி ஆற்றில் இறங்கி குளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889933.jpgஅரூர் அருகே வீட்டுமனை பட்டா கோரி 35 ஆண்டுகளாக போராடும் கிராம மக்கள்

அரூர்: தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கே.வேட்ரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது அ.ஈச்சம்பாடி சந்தை பகுதி. இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுமார் 15 குடும்பத்தினர் 35 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சவுரி பின்னும் தொழில் செய்து வருகின்றனர்.

வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டும் இன்று வரை நடவடிக்கை இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/889924.jpgமழைக்கால களப் பணிகளை கண்காணிக்க மண்டல வாரியாக 15 சிறப்பு அதிகாரிகள் நியமனம்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னை: பருவமழை காலத்தில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிக்க மாநகர பகுதிக்குள் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஒரு செயற்பொறியாளர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக சென்ன குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை குடிநீர் வாரியம் சார்பில் நாளை (நவ.1) முதல் 30-ம் தேதி வரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படும் களப்பணிகளை கண்காணிப்பதற்காக, மண்டலத்துக்கு ஒரு செயற்பொறியாளர் வீதம், 15 பேர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/31/large/890058.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 29, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/30/large/889442.jpgதேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனை

விருதுநகர்: பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் குரு பூஜைக்குச் செல்லும் வாகனங்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

பசும்பொன்னில் 115-வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குரு பூஜை இன்று (அக்.30) நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து மரியாதை செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/30/large/889581.jpgகோவை சம்பவம் | ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறை இல்லை: மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவை: கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் ‘ஒற்றை ஓநாய் தாக்குதல்’ முறையிலான சம்பவம் இல்லை என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில், ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். காரில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் பயங்கர சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/30/large/889582.jpgதிருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்: 7 எஸ்பிக்கள் தலைமையில் 3,000 போலீஸார் பாதுகாப்பு

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கடந்த 25-ம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று (30-ம் தேதி) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற பூஜைகள் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/30/large/889617.jpgகார் சிலிண்டர் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்: கோயில்களை தகர்க்க ஒத்திகை

கோவை: கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான விசாரணையில், முக்கியக் கோயில்களை தகர்க்க தனது கூட்டாளிகளுடன் ஜமேஷா முபின் ஒத்திகை பார்த்தது தெரியவந்துள்ளது.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகில் கடந்த 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடித்ததில், காரை ஒட்டி வந்த ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். இது தொடர்பாக முகமது தல்கா(25), முகமது அசாருதீன்(23), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(27), முகமது நவாஸ் இஸ்மாயில்(26), அப்சர்கான்(28) ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889290.jpgதிமுகவினர் போல் செயல்படுகிறீர்கள்: தமிழக காவல் துறைக்கு அண்ணாமலை பதில்

சென்னை: “தமிழக காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி காவல் துறையினராக இல்லாமல் திமுகவினர் போல் செயல்படுகிறார்கள்” என தமிழக காவல் துறைக்கு பதில் அளித்துள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. அவர் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் என காவல் துறை முன்னதாக சாடி இருந்தது.

“தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் தகுந்த பதில் விரைவில் வழங்கப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Friday, October 28, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889174.jpgகோவை வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தாமதம் இல்லை; எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை: ஆளுநருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

தூத்துக்குடி: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்ததில் தமிழக அரசு தாமதம் செய்யவில்லை. வழக்கு தொடர்பான எந்த ஆதாரமும் அழிக்கப்படவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி,‘‘கோவை கார் சிலிண்டர் வெடிப்புசம்பவம் நடந்த பிறகு, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு பரிந்துரைக்க தமிழக அரசு4 நாட்கள் அவகாசம் எடுத்துக்கொண்டது தவறு. அவகாசம் வழங்கினால், தீவிரவாதிகள் அனைத்து தடயங்களையும் அழித்துவிட வாய்ப்பு உண்டு’’ என்று கூறினார்.

இந்நிலையில், அரசு சார்பில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், தூத்துக்குடியில் தமிழகதொழில் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று மாலை கூறியதாவது: கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் நடந்த உடனேயே தமிழக காவல் துறையினர் துரிதமாக விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் வீட்டில் சோதனைநடத்தியதுடன், அவரது கூட்டாளிகளையும் உடனடியாக கைது செய்தனர். சம்பவம் நடந்த உடனேயே மத்திய உளவுத்துறை (ஐ.பி.),தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஐ.பி., என்ஐஏ உடன் இணைந்தே தமிழக காவல் துறை இந்த வழக்கை விசாரித்து வந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889176.jpgதமிழக விவசாயிகளிடம் இருந்து 19% வரை ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல்: மத்திய அரசு அனுமதி

சென்னை: தமிழகத்தில் 19 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மழை அதிகமாக இருப்பதால், விவசாயிகளிடம் இருந்து 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய உணவுத் துறைக்கு தமிழக உணவுத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடந்த அக். 10-ல் கடிதம் எழுதினார். இதையடுத்து, மத்திய உணவுத் துறை, மத்திய தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் தமிழகத்தில் ஆய்வு நடத்தினர். அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கொள்முதல் செய்யும் நெல்லின் ஈரப்பதத்தை 17-ல் இருந்து 19 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் சாதாரண, சன்னரக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையையும் நிர்ணயித்துள்ளது. அதன்படி, ஈரப்பதம் 17 சதவீதமாக இருந்தால் சாதாரண ரக நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு ரூ.2,040, சன்ன ரகத்துக்கு ரூ.2,060 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரப்பதம் 17-18 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.2,019.60, சன்ன ரகத்துக்கு 2,039.40 என்றும், ஈரப்பதம்18-19 சதவீதம் இருந்தால், சாதா ரகத்துக்கு ரூ.1,999.20, சன்ன ரகத்துக்கு ரூ.2,018.80 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889115.jpgகொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்க ரூ.750 கோடி கடன் பெற மாநகராட்சி மன்றத்தில் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. மேயர் ஆர்.பிரியா தலைமையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர்முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 70 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் கீழ் கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் ரூ.3,220கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மாநகராட்சி பங்களிப்பு தொகையான ரூ.750 கோடி நிதி தேவையை தமிழக அரசின் டுஃபிட்கோ (TUFIDCO) நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற மன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும் ரூ.429 கோடியில் ராயபுரம், திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் புதிதாக 516 கழிப்பறைகள் கட்டவும், 68 சிறுநீர் கழிப்பிடங்கள், 69 குளியலறைகள் கட்டவும், பல்வேறு இடங்களில் கழிப்பிடங்களை பழுது பார்க்கவும், குறிப்பாக பொதுமக்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்அதிகம் வந்து செல்லும் மெரினா கடற்கரையில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், ஏற்கெனவே உள்ள கழிப்பறைகளை பராமரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கும் மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அம்பத்தூர் பாடியில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மெட்ராஸ் எஸ்பிளனேடு ரோட்டரி சங்கம் மூலமாக மகளிர் புற்றுநோய் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/29/large/889207.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | கைதான 5 பேரின் வீடுகளில் போலீஸார் மீண்டும் சோதனை - 3 நாள் விசாரணைக்குப் பிறகு சிறை

கோவை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரின் வீடுகளில் போலீஸார் நேற்று மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.

கோவையில் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில், ஜமேஷா முபின்(25) உயிரிழந்தார். அவரது வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் கைப்பற்றப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888861.jpgதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்துகொண்டார்.

கடந்த சில நாட்கள்முன் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அதன்பின் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கின் ஆலோசனை கூட்டம் போன்றவற்றில் பங்கேற்றார். நேற்றுகாலை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் திறந்துவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Thursday, October 27, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888606.jpgதிமுக அரசு தமிழ்மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தாம்பரம், காஞ்சி, திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம்: பாஜக நிர்வாகிகள் பங்கேற்பு

தாம்பரம்/காஞ்சி/திருவள்ளூர்: திமுக அரசு தமிழ்மொழியைப் புறக்கணிப்பதாக குற்றம்சாட்டி தாம்பரம், காஞ்சி, திருவள்ளூரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தாம்பரம் சண்முக சாலையில் செங்கை மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் வேதசுப்பிரமணியம் தலைமையில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாய்மொழியாம் தமிழுக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகை ஏந்தி 100-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், ‘மத்திய கல்விக் கொள்கைகளை அமல்படுத்த வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்’ போன்ற கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் கலந்து கொண்ட மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் திமுக அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். இதில் வேதசுப்பிரமணியம் பேசியபோது, “தொடர்ந்து தமிழக வளர்ச்சிக்காக நமது தலைவர் அண்ணாமலை பாடுபட்டு வருகிறார். இதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888613.jpgநந்தனம் | ரூ.320 கோடி செலவில் 12 மாடிகளுடன் மெட்ரோ ரயில் தலைமையகக் கட்டிடம்: ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திறந்து வைத்தனர்

சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்கட்டம், முதல்கட்டம் நீட்டிப்பு பணிகள் முடிந்து, 54.1 கி.மீ. தொலைவுக்கு 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மொத்தம் 173 கி.மீ.தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள்சென்னை பெருநகரில் இன்னும் சிலஆண்டுகளில் இயக்கப்படவுள்ளன.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமையகம் கோயம்பேட்டில் செயல்படுகிறது. கோயம்பேடு பணிமனை வளாகத்தில் அமைந்துள்ள இயக்கக் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் மெட்ரோ ரயில் இயக்கத்தையும், நிர்வாகப் பணிகளையும் மெட்ரோ ரயில் நிறுவனம் நிர்வகிக்கின்றது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இயக்கங்களுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தலைமையகக் கட்டிடத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டி, அண்ணாசாலையில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்த 8.96 ஏக்கர் நிலத்தில் ரூ.320 கோடி செலவில் சென்னை மெட்ரோரயில் நிறுவனத்தின் தலைமையகக் கட்டிடம் கட்டும் பணி சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் முடிந்து, 'சிஎம்ஆர்எல் பவன்' என்ற பெயரில் கட்டிடம் தயாரானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888766.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | முபினின் நெருங்கிய உறவினர் கைது - கூட்டாளிகளிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை

கோவை/சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஜமேஷா முபினின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில், ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/27/large/888339.jpgதனியார் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டினாரா? - பெண் ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: பெண் ஊராட்சித் தலைவர் மீதான தனியார் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரை விசாரித்து, குற்றச்சாட்டு உறுதியானால் பதவி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவர் சுந்தரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சேதுராயன்புதூர் ஊராட்சிப் பகுதியில் அரசன் நைட்ரஸ் கம்பெனி உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை மூட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை நிறுவனத்தை மூடவில்லை. இந்த நிறுவனத்தை மூட உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/28/large/888341.jpgகோவை கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் பின்னணி

கோவை: கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய கார் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ அதிகாரிகளான டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் ஆகியோர், அடிப்படைவாத வழக்குகளை சிறப்பாக கையாண்ட அனுபவம் உள்ளவர்கள் ஆவார்.

கோவை கோட்டைமேட்டில் கடந்த 23-ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வுப் பிரிவு எனப்படும் என்.ஐ.ஏ-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் புதியதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, என்.ஐ.ஏ தென் மாநிலங்களுக்கான பிரிவு டிஐஜி வந்தனா, எஸ்.பி ஸ்ரீஜித் தலைமையிலான குழுவினர் கடந்த 23-ம் தேதி இரவே கோவைக்கு வந்தனர். மேற்கண்ட கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/27/large/888337.jpgமதுரை | நிரம்பி வழியும் குப்பை தொட்டிகளால் தூர்நாற்றத்தை நுகர்ந்தவாறே பள்ளி செல்லும் மாணவர்கள்

மதுரை: பள்ளிகள் முன் வைக்கப்படும் குப்பை தொட்டிகளில் நிரம்பும் குப்பைகள் அள்ளப்படாமல் இருப்பதால் மதுரையில் பல இடங்களில் பள்ளி குழந்தைகள் தினமும் தூர்நாற்றத்தை நுகர்ந்தவாறே பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையாளராக விசாகன் இருந்தபோது குப்பை தொட்டிகள் இல்லாத நகரம் உருவாக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பொது இடங்களில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு வீடுகள் தோறும் நேரடியாக சென்று தூய்மைப்பணியாளர்கள் சேரித்தனர். சேகரித்த குப்பைகளை தரம்பிரித்து அந்த வார்டு பகுதிகளிலே உள்ள உரக்கிடங்கிற்கு கொண்டு அங்கேயே குப்பைகளை அழித்து உரமாக்கப்பட்டது. பொது இடங்கள், வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரளவு வெற்றிகரமாக செயல்பட்டநிலையில் பொது இடங்கள், சாலைகளில் குப்பை தொட்டிகளும், குப்பைகளும் இல்லாமல் தூய்மையாக காணும்நிலை தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Wednesday, October 26, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/27/large/888099.jpgநட்சத்திர விடுதி கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இழப்பீடு: ரூ.21 லட்சம் வழங்கப்படும் என தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தகவல்

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நட்சத்திர விடுதியில் கழிவுநீர் தொட்டி சுத்திகரிப்புப் பணியின்போது, விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்குதலா ரூ. 21 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் சென்னை - பெங்களூர் சாலையில் சத்தியம் கிராண்ட் என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் கீழண்டைத் தெரு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் (51), நவீன்குமார் (30), திருமலை(25) ஆகிய 3 பேரும் உள்ளே இறங்கியுள்ளனர். இவர்கள் உள்ளே இறங்கி சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை நடத்தியது. அந்தக் கழிவுநீர் தொட்டியை ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கினார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த திருமலை என்பவரின் சகோதரிக்கு அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார். மூவரின் குடும்பத்தினருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது. பின்னர், ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/27/large/888107.jpgதீபாவளிக்கு சென்றவர்கள் சென்னை திரும்பினர்: புறவழிச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல்

சென்னை: தீபாவளியைக் கொண்டாட சொந்தஊர் சென்றவர்களில் பலர் நேற்றுசென்னை திரும்பினர். இதனால்புறவழிச்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்.21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. அன்றைய தினம் முதலே பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் தங்களது சொந்த ஊர்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். அவர்கள் அரசுப்பேருந்துகள் மட்டுமின்றி ரயில்கள்,ஆம்னி பேருந்துகள், சொந்த வாகனங்கள் எனப் பல வாகனங்களில் ஊர்களுக்குச் சென்றனர்.

சென்னையில் அரசு பேருந்துகள் 6 முக்கிய இடங்களிலிருந்து இயக்கப்பட்டன. அக்.22-ம் தேதி முக்கியபேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. இவ்வாறு சென்னையிலிருந்து அக். 21, 22, 23 ஆகிய தேதிகளில் மொத்தமாக இயக்கப்பட்ட 10,325 பேருந்துகளில் 5,63,541 பேர் பயணித்திருந்தனர். இதேபோல் பல்வேறு பகுதிகளிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்துகள் மூலம் பொதுமக்கள் நெரிசலின்றி பயணித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/26/large/887790.jpgதேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் கட்சி தலைவர்கள், அமைப்பினருக்கான நேரம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

மதுரை: பசும்பொன் தேவர் ஜெயந்தியையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பதிவு பெற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான உத்தேச நேரம் ஒதுக்கீடு குறித்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன் விவரம்: அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் காலை 10 முதல் 10.15 மணிக்குள், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 0.15-10.30, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலர் முனியசாமி 10.30-10.45, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி 10.45-11, மதிமுக -11-11.15, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம் 11.15-11.30 மணிக்குள் அஞ்சலி செலுத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/26/large/887792.jpgகோவை | சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறிய உளவுத்துறையை பலப்படுத்த வலியுறுத்தல்

கோவை: கோவை மாநகரில் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில், மாநகர காவல்துறையின் உளவுத்துறையை பலப்படுத்த வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் அரசுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு எனப்படும் உளவுத்துறை (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகியவை முக்கியமானதாகும். உளவுத்துறையின் சார்பில், மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்.ஐக்கள், 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் என மொத்தம் 45 பேருடன் இப்பிரிவு இயங்குகிறது. சிறப்பு நுண்ணறிவுப் பிரிவின் சார்பிலும் மாநகரின் 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். இதற்கும் உதவி ஆணையர் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/26/large/887789.jpgகோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு

கோவை: கோவையில் வரும் 31-ம் தேதி தமிழக அரசை கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவையில் இன்று (அக்.26) செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாதம் மீண்டும் கோவையில் தலைதூக்கி உள்ளதை, காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் உறுதிப்படுத்துகிறது. இறந்த நபர் தீவிரவாதிகளின் நெருங்கிய நபர். தமிழக அரசு பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருக்கிறது என்பது எதார்த்தமான உண்மை. பயங்கரவாதத்தின் ஆணிவேரை தோண்டி எடுத்து அகற்றும் வரை ஆபத்து சூழ்ந்தே இருக்கும். இதை மனதில் கொண்டு தமிழக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Tuesday, October 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/26/large/887698.jpgகோவை கார் சிலிண்டர் வெடிப்பு | முபினின் கூட்டாளிகள் 5 பேர் கைது - ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன் தொடர்பு

கோவை: கோவையில் கார் வெடித்து உயிரிழந்த ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ள போலீஸார், அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு (‘உபா’) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இலங்கை குண்டுவெடிப்பில் தொடர்பு உடைய ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்களுடன், உயிரிழந்த முபினுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோயில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டைமேடு வழியாக கடந்த 23-ம் தேதி அதிகாலை 4.10 மணி அளவில் சென்ற மாருதி கார், சங்கமேஸ்வரர் கோயில் முன்புள்ள வேகத் தடையை கடந்தபோது திடீரென வெடித்து தீப்பிடித்தது. காரில் 2 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதும், காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887269.jpgமதுரை | தீபாவளி விடுமுறை முடிந்ததால் ரயில், பேருந்து நிலையங்களில் நிரம்பிவழிந்த பயணிகள் கூட்டம்

மதுரை: தீபாவளி விடுமுறைக்கு வந்தவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பி வருவதால் மதுரை ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு இவ்வாண்டு, தீபாவளியை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டினர். வெளியூர்களில் இருந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இம்முறை தீபாவளி திங்கள் கிழமை அன்று என்பதால் முன்னதாக சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏராளமானோர் தீபாவளி கொண்டாட வந்தனர். பெரும்பாலும், இவர்கள் சுமார் 2 மாதத்திற்கு முன்பாகவே ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887226.jpgவானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அக்.29-ல் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 29-ம் தேதி பரவலாக கனமழை வாய்ப்பு நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்: இன்று (அக்.25) ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887222.jpg'கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல்' - அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: "கோவையில் நடந்தது தற்கொலைப்படைத் தாக்குதல். கோவையில் கார் வெடி விபத்தில் இறந்த நபரின் வீடுகளில் சோதனை நடத்தியபோது கிட்டத்தட்ட 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம், ப்ஃயூஸ் வயர்ஸ், 7 ஓல்ட் பேட்டரி இவை அனைத்தையும் கைபற்றியுள்ளனர். இந்த தகவலை காவல்துறை இன்னும் தெரிவிக்கவில்லை. தமிழக அரசு ஏன் இந்த தகவலை வெளியிட மறுக்கிறது என்று தெரியவில்லை" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: " தீபாவளிக்கு முன்தினம் அக்.23, கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நிகழ்ந்ததாக செய்தி வந்தது. பின்னர், அந்தக் காரிலிருந்த சிலிண்டர் வெடித்துள்ளது என்று செய்தி வந்தது. அதன்பிறகு தமிழக காவல்துறை டிஜிபி, ஏடிஜிபி போன்றோர் விரைந்து கோவை சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887220.jpgதீபாவளி | டாஸ்மாக்கில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையா? - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.708 கோடிக்கு மது விற்பனையானது என்ற தகவல் தவறானது என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், " தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு தனியார் தொலைக்காட்சி நீக்கியது. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887218.jpgதீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்தில் 500-க்கும் மேற்பட்டோர் காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து அரசு மருத்துவமனைகளில் 179 பேர் உள்நோயாளிகளாகவும், 345 பேர் புற நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெற்றுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தீபாவளி பண்டிகையன்று நிகழ்ந்த பட்டாசு விபத்துகளால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: " தீபாவளியன்று பட்டாசு வெடித்த விபத்துகளில் காயமடைந்து ஸ்டான்லி மருத்துவமனையில் 11 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 11 பேரில், திருவண்ணாமலை, பண்ருட்டி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் கைகளில் காயம் ஏற்பட்டு, விரல்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கூட இவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887216.jpgஇந்தி தெரியாததால் தமிழக மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல்: வைகோ கண்டனம்

சென்னை: இந்தி மொழி தெரியாததால் தமிழக மீனவர்களை இழிவுப்படுத்தி தாக்கிய இந்திய கடற்படையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், மத்திய அரசு தமிழக மீனவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மயிலாடுதுறை மாவட்டம் வானகிரி மற்றும் தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் செருதூர், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளிலிருந்து சுதீர் (30), செல்வகுமார் (42), செல்லதுரை (46), சுரேஷ் (41), விக்னேஸ்வரன் (24), மகேந்திரன் (31), பாரத் (24), பிரசாந்த் (24), மோகன்ராஜ் (32), வீரவேல் ஆகிய 10 பேர் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887214.jpgதீபாவளியன்று சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை: தீபாவளியன்று சென்னையைப் பொருத்தவரை காலை 4 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 192-ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகையை மக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Monday, October 24, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887212.jpgசட்டம் - ஒழுங்கு பிரச்சினை | நாட்டையும், மக்களையும் காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவும்: ஓபிஎஸ்

சென்னை: முதல்வர் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி நாட்டையும், மக்களையும் வன்முறையாளர்களிடம் இருந்து காக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த ஒன்றரை ஆண்டு கால திமுக ஆட்சியில் தீவிரவாதம், பயங்கரவாதம், கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலைவிரித்து ஆடுகிறது என்றும்; சட்டம் - ஒழுங்கு சீர்செய்யப்பட்டால்தான் தமிழகம் தொழில் வளத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேறும் என்றும் சுட்டிக்காட்டி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது வேண்டுகோள் விடுத்து வந்துள்ளேன்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/25/large/887211.jpgகோவை கார் வெடிப்பு சம்பவம் | 5 பேர் கைது; திட்டமிட்ட சதியா என விசாரணை - நகரில் போலீஸ் குவிப்பு

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கோவை உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேட்டில் பழமை வாய்ந்த சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கடைகள்,குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில்,கடந்த 23-ம் தேதி அதிகாலை கோட்டைமேட்டில் இருந்து டவுன்ஹால் நோக்கி ஒரு மாருதி கார் வந்தது.இந்தக் கார் சங்கமேஸ்வரர் கோயில் அருகேயுள்ள வேகத்தடையின் மீது ஏறி இறங்கிய போது, திடீரென வெடித்து தீப்பிடித்தது. தகவல் அறிந்த உக்கடம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் காரை ஓட்டி வந்த நபர் உயிரிழந்தார். தீ விபத்தில் கார் இரண்டாக உடைந்து உருக்குலைந்தது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிலிண்டர்கள் இருந்ததும், அதில் ஒரு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதும், உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த ஜமேஷா முபின்(25) என்பதும் தெரியவந்தது.

மேலும், கார் உருக்குலைந்து கிடந்ததையும், பயங்கர சத்தம் வந்ததையும் வைத்து பார்க்கும் போது, காரில் வெடிமருந்துகளும் இருந்திருக்கலாமோ என்ற சந்தேகமும் போலீஸாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து மோப்ப நாய்களை வைத்து சோதனை செய்தனர். தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு இருந்த தடயங்களை சேகரித்தனர். காரின் உடைந்த பாகங்கள், ஆணிகள்,பால்ரஸ் குண்டுகள் உள்ளிட்டவற்றை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி தாமரைக் கண்ணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார் உயிரிழப்பு, வெடிப்பொருள் தடைச்சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தனர். மேலும், உயிரிழந்த ஜமேஷா முபின் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்து பல கிலோ நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான வேதிப்பொருட்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Sunday, October 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/24/large/887079.jpgமகசூல் அதிகரிப்பால் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி: வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் வேதனை

மகசூல் அதிகரிப்பால், கத்தரிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், வேப்பனப்பள்ளி பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் அதிகளவில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, மத்தூர், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் முள்ளங்கி, வெண்டை, கத்தரிக்காய் சாகுபடி செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/24/large/887111.jpgபயண செலவு, தங்குமிடம் இலவசம்; காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு: சென்னை ஐஐடி தகவல்

சென்னை: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் இணையத்தில் பதிவு செய்யலாம் என்றும், அவர்களுக்கு பயண செலவு, தங்குமிடம் இலவசம் என்றும் சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற முன்முயற்சிக்கு அறிவுசார் ஒத்துழைப்பை வழங்க உள்ளது. தமிழகத்துக்கும், வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையில் உள்ள ஆழமான கல்வி, பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உறவுகளை வெளிக்கொணருவது இதன் நோக்கமாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/24/large/887059.jpgதீபாவளி பண்டிகை கடைசி நாள் விற்பனை: துணி, பட்டாசு, நகை, இனிப்பு வாங்க அலைமோதிய கூட்டம்

சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி கடைசி நாளான நேற்று துணி எடுக்கவும், பட்டாசு வாங்கவும் கடைகளில் கூட்டம் அலைமோதியது. தீபாவளி பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் கடைகளில் விற்பனை நேற்று களை கட்டியது.ஞாயிற்றுக்கிழமையான நேற்றுசென்னையில் தீபாவளிக்கு பட்டாசு, புத்தாடைகள், நகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடைகளுக்குப் படையெடுத்தனர்.

தியாகராய நகரில் நேற்று காலை முதலே பொருட்கள் வாங்குவதற்கும், துணிகள் வாங்குவதற்கு மக்கள் குவிந்தனர். இதனால் உஸ்மான் சாலை, பாண்டிபஜார், பனகல்பூங்கா, பர்கிட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவல் துறையினர் மும்முரமாக ஈடுபட்டனர். அதேபோல், நகைகளையும் மக்கள் அதிகளவில் வாங்கிச் சென்றதால், நகைக்கடைகளில் கூட்டம்அலைமோதியது. பெரிய கடைகளுக்குச் சற்றும் சளைக்காமல் சிறிய கடைகளிலும் கூட்டம் அதிகம் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/24/large/887137.jpgதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை குறையும்

சென்னை: சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் கூறியதாவது. தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது.

இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும். தொடர்ந்து, அக். 25 (நாளை) அதிகாலை வங்கதேச கடற்கரையைக் கடக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886816.jpg“கோவை சம்பவம்... பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னோட்டமா என விசாரிக்க வேண்டும்” - வானதி சீனிவாசன்

கோவை: கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை விபத்தாக மட்டும் பார்க்காமல், அனைத்து கோணங்களிலும் விசாரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, டவுன்ஹால் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியில் பழமை வாய்ந்த கோட்டை ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் அருகே இன்று (அக்.23) அதிகாலை 4.10 மணி அளவில் வந்த கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறி, தீப்பற்றி எரிந்துள்ளது. காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நடந்ததாக செய்திகள் வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886728.jpgஆறுமுகசாமி அறிக்கையை பாஜக ஏற்காது: தமிழக தலைவர் அண்ணாமலை தகவல்

ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரித்த ஆறுமுகசாமி ஆணையம் ஆதாரமின்றி கருத்துகளை கூறியுள்ளதால், இப்போதைக்கு அந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886732.jpg‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 255 பேருக்கு பணி நியமன ஆணை: சென்னையில் நிர்மலா சீதாராமன் வழங்கினார்

மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ், 255 பேருக்கு பணிநியமன ஆணைகளை சென்னையில் நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.

நாடு முழுவதும் உள்ள, மத்திய அரசுத் துறைகளான ரயில்வே, வருமான வரி, சுங்கம், ஜிஎஸ்டி, அஞ்சல், பொதுத் துறை வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனப் பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தை பிரதமர்நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று தொடங்கிவைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886729.jpgமாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க தடை: தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சிக்கு பாதிப்பா?

மாநில அரசுகள் தொலைக்காட்சி சேவை வழங்க மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு நடத்தி வரும் கல்வித் தொலைக் காட்சிக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

மத்திய தொலைதொடர்பு கண்காணிப்பு நிறுவனமான ‘ட்ராய்’ (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) கடந்த 2012-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கிய அறிவுறுத்தலில், ‘மத்திய, மாநிலஅரசுகள், அவற்றின் நிறுவனங்கள் தனியாருடன் இணைந்து ஒளிபரப்பு தொழிலை மேற்கொள்ளக் கூடாது’என்று குறிப்பிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Saturday, October 22, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/10/23/large/886670.jpgபேருந்து, ரயில்களில் இடம் கிடைக்காததால் சொந்த ஊருக்கு விமானத்தில் பறக்கும் பொதுமக்கள்: டிக்கெட் கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேருந்து, ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் பலரும் சொந்த ஊர் செல்ல விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அதற்கேற்ப, கட்டணமும் 3 மடங்கு உயர்ந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற வண்ணம் உள்ளனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்கவில்லை. இது தவிர, கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் பலர் சொந்த ஊருக்கு செல்கின்றனர். டிக்கெட் கிடைக்காத பலரும் தற்போது விமான சேவையை நாடி வருகின்றனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்