
சென்னை: தீபாவளியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கூடுதலாக 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினத்திலிருந்தே இப்பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் உள்ளபேருந்து நிலையங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். ஆனால், பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்