Monday, January 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/01/23/large/932951.jpgமதுரை ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி மந்தம் - சித்திரைத் திருவிழாவிற்குள் முடியுமா?

மதுரை: ரூ.20 கோடியில் வைகை ஆறு குறுக்கே கட்டப்படும் ஒபுளாபடித்துறை மேம்பாலம் கட்டுமானப் பணி, மந்தகதியில் நடக்கிறது. சித்திரைத் திருவிழாவிற்குள் இந்த பாலம் பயன்பாட்டிற்கு வராவிட்டால் கடந்த ஆண்டை போல் வைகை ஆறு கரையில் திருவிழாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மதுரை வடகரை, தென்கரை பகுதி மக்கள், வாகன ஒட்டிகள் எளிதாக வைகை ஆற்றை கடந்து இரு நகரப்பகுதிகளுக்கு சென்று வருவதற்காக ஆரம்ப காலத்தில் ஏவி மேம்பாலம், யானைக்கல் மேம்பாலம் மற்றும் தரைப்பாலங்கள் இருந்தன. தற்போது தரைப்பாலங்களை இடித்துவிட்டு அந்த இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் ஒபுளாபடித்துறை அருகே வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகளை இணைத்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு தற்போது நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மாநகராட்சி ரூ.20 கோடியில் மேம்பாலம் கட்டுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...