
கோவை: அனுமதியின்றி சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்ட விவகாரம் தொடர்பாக 8 திரையரங்குகளுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி துணிவு, வாரிசு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11-ம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டன. கோவையில் பல திரையரங்குகளில் நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணிக்கு ரசிகர்களுக்காக சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்