
சென்னை: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரத்தில், போலி ஆவணங்களுக்கு இழப்பீடு வழங்கியது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி போலீஸார் மெதுவாக செயல்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற நேரிடும் என எச்சரித்துள்ளது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்துக்காக, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.20.52 கோடி இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராஜேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்