
சென்னை: முந்தைய அரசு கொண்டுவந்த திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடவில்லை என்று ஆர்.பி.உதயகுமாருக்கு நீர்வளத் துறைஅமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். சட்டப்பேரவையில், நீர்வளம் மற்றும் தொழிலாளர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்நேற்று தொடங்கியது.
விவாதத்தை, அதிமுக உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்துப் பேசியதாவது: நீர்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், மறைந்தமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்த தகவல்கள் இல்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்