Wednesday, March 29, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/03/30/large/968072.jpgஅரசு விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்குமேல் பயணித்தால் 50% கட்டண சலுகை: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து மானிய கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடைபெற்றது.விவாதத்துக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள்: அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் வழக்கமாக பயணிக்கும் பயணிகளுக்கு, மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணித்தால் 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படும். போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்காக மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் ரூ.3.55 கோடியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூரில் உள்ள பேருந்து பணிமனை மற்றும் பேருந்துநிலையங்கள் முறையே ரூ.10.76 கோடி, ரூ.5.43 கோடியில் மேம்படுத்தப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...