
தருமபுரி: கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1,000 பெறுவதற்கான விண்ணப்ப பதிவை தருமபுரி மாவட்டம் தொப்பூரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தகுதி வாய்ந்த பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும். இத்திட்டத்தால் பெண்கள் சுயமரியாதையும், பொருளாதார விடுதலையும் அடைவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் முகாம் தொடக்க விழா தருமபுரி மாவட்டம் தொப்பூரில் நேற்று நடந்தது. தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்