
மதுரை: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவை 65.77 சதவீதம் குறைந்துள்ளது பெரிய முன்னேற்றம் என உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
விருதுநகரைச் சேர்ந்த பிரினிஷ் பிரபு தாஸ் என்ற பிரின்ஸ் பிரபு தாஸ் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு: என் மீதான வழக்கு முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தேன். விசாரணையின் போது என் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்