
மதுரை: குமரி மாவட்டம் மயிலோடு தேவாலயத்தில் கொலையானவர் உடலை ஆலய வளாகத்தில் அடக்கம் செய்யக்கூடாது, கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலோடு பகுதியைச் சேர்ந்த ஆல்வின் ஜோஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மயிலோடு பகுதியில் செயின்ட் மைக்கேல் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையுடன் உள்ளனர். சேவியர் குமார் என்பவர் ஆலயத்தில் தேவையற்ற பிரச்சனைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வந்தார். இதனால் அவரை ஜன. 20ல் கிராம மக்கள் தாக்கினர். இதில் சேவியர்குமார் உயிரிழந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்