
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் இடியும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி பயின்று வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி மடவார் வளாகத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைந்துள்ள வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்ததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டது. தற்போது அங்கன்வாடி மையத்தின் சமையல் கூடத்தில் கான்கிரீட் மேற்கூரையும், வகுப்பறையில் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையும் உள்ளது. சமயலறை கட்டிடத்தின் மேல் இரு ஆலமரங்கள் வளர்ந்துள்ளது. மரத்தின் வேர்கள் சுவரில் வளர்ந்து, வகுப்பறையின் கரும்பலகை மற்றும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்