
புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகர்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில்புகார் அளித்திருந்தார். அதில், “தனது 17 வயது மகள், கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தஅருண்குமார் என்ற இளைஞர் அம்மாணவியை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்ததோடு, அதை காட்டிமிரட்டி பலமுறை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி வந்துள்ளார். இதனால் அம்மாணவி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்தஜூன் 19-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். எனவே அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்தில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்