
பிரபலமான பத்தமடை பாய் விற்பனையை சென்னை, பெங்களூரு போன்ற மாநகரங்களில் அதிகரிக்க உதவ வேண்டும் என்று ‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’வுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.விஷ்ணு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘தி கிராஃப்ட்ஸ் கவுன்சில் ஆஃப்இந்தியா’ (The Crafts Council of India) சார்பில் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில், பாரம்பரியமாக கோரை பாய்களை நெய்து வரும்மகளிருக்கு தொழில்நுட்பம் மற்றும்சந்தைப்படுத்துதல் பயிற்சி வழங்கப்பட்டது. அந்த பயிற்சி குறித்த அனுபவ பகிர்வு நிகழ்ச்சி இணையவழியில் நேற்று நடைபெற்றது. அதில் ‘தி கிராஃப்ட் கவுன்சில் ஆஃப்இந்தியா’ தலைவர் கீதா ராம் பங்கேற்று தொடக்கவுரையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்