
தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்து வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் அமைந்துள்ள நிலையில், கடந்த 1996-ம்ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக வெளிநாட்டுக் கார் நிறுவனமான ஹூண்டாய் நிறுவனம் கால் பதித்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. மத்திய அரசில் தொழில்துறை அமைச்சராக இருந்தவர் முரசொலிமாறன்.
இவர்களின் தீவிர முயற்சியால் 1996-ம் ஆண்டிலேயே ரூ.3,500கோடி என்ற பெரிய அளவு முதலீட்டில் சென்னை ஸ்ரீபெரும்புதூரைஅடுத்த இருங்காட்டுக்கோட்டையில் அமைந்தது ஹூண்டாய் கார்தயாரிப்பு தொழிற்சாலை. இதற்காக 500 ஏக்கர் நிலம் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்