
காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான உத்திரமேரூர் ஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஏற்கெனவே இந்த ஏரிக்கான நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போது ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியும் ஆக்கிரமிக்கப்படுவது அந்தப் பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் பகுதி மக்கள் விவசாயத்தையும், கால்நடை வளர்ப்பையும் பிரதான தொழிலாககொண்டவர்கள். இந்த ஊரில் உள்ள பெரிய ஏரியானது 5,736ஏக்கர் பாசன பரப்பை கொண்டது. இதனால் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்