
தேர்தலில் வென்று 55 நாட்களுக்குப் பிறகு, புதுச்சேரியில் 5 அமைச்சர்கள் நாளை (ஜூன் 27) பதவிஏற்கின்றனர். இதற்காக, ஆளுநர்மாளிகை வெளியே மேடை அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
தமிழ்நாடு, கேரளம், அசாம், மேற்குவங்கம் ஆகியவற்றுடன் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரி நீங்கலாக மற்ற மாநிலங்களில் முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்று சட்டப்பேரவை கூடிவிட்டது. ஆனால் புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி மட்டும் பொறுப்பேற்றிருந்த நிலையில், என்.ஆர்.காங். - பாஜக கூட்டணியில் அமைச்சர் பதவிகளை பெறுவதில் இழுபறி நீடித்தது. நீண்ட இழுபறிக்குப் பின்பு பாஜகவுக்கு பேரவைத் தலைவர் பதவி, 2 அமைச்சர்கள்; என்.ஆர்.காங்கிரஸுக்கு துணை பேரவைத் தலைவர் பதவி, 3 அமைச்சர்கள் பதவி என முடிவானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்