
கோவை மாவட்டத்தில் அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டும், ஆர்டர்கள் வராத காரணத்தால் பெரும்பாலான சிறு, குறு நிறுவனங்களில் உற்பத்தி தொடங்கவில்லை.
கரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் 100 சதவீதம் பணியாளர்களுடனும், இதர தொழிற்சாலைகள் 33 சதவீதம் பணியாளர்களுடனும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்