
போரூர் ஏரியில் குப்பைகள், மருத்துவக் கழிவுகளைக் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் மணிமண்டபத்தில் உள்ள தியாகிகள் செண்பகராமன், ஆர்யா என்கிற பாஷ்யம், சங்கரலிங்கனார் சிலைகளுக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்களின் படங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்