
எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பும், தேவையும் உள்ள படிப்புகளாக மின்னியல், மின்னணு, எரிசக்தி துறைகள் விளங்குகின்றன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதாவிஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வவித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. கடந்த 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, இன்னும் 13 நாட்கள் நடக்க உள்ளது. கடந்த 18-ம் தேதிநடந்த 5-வது நிகழ்வில் மின்னியல், மின்னணு, எரிசக்தி துறை படிப்புகள் எனும் தலைப்பில் இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்