
கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் நேற்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்தனர். அதன்பின் அவர்கள் தலைமைச் செயலக கட்டிடத்தின் 10-ம் எண் நுழைவு வாயில் அருகில் வந்தனர்.
அப்போது, அவர்களுடன் வந்த ஒருவர், திடீரென அங்கு நிறுத்தப்பட்டிருந்த முதல்வரின் கார் முன் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தியதுடன், தனது நிலம் தொடர்பான பிரச்சினையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோஷமிட்டார். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், உடனடியாக அவரை அப்புறப்படுத்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்