
தனது வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியது திமுகஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை மற்றும் கரூரில் உள்ள எனது வீடுகள், நிறுவனங்கள் மற்றும் உதவியாளர்கள் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தியுள்ளனர். எனக்குசென்னை மற்றும் கரூரில் சொந்தவீடு கிடையாது. வாடகை வீடுகளில் தான் வசிக்கிறேன்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்