
காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
மேட்டூர் அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்ததால், தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ல்நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து தற்போது சாகுபடி பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்