
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அரசு நிலங்கள், பொது வெளிகள், அரசு அலுவலகங்களில் மரங்களை வெட்டுவதைத் தடுக்கவும், கீழே விழுந்த மரங்களை அகற்றுவது தொடர்பான பரிந்துரைகளை வழங்கவும் மாநில, மாவட்ட அளவில் பசுமைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசு நிலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களை வெட்டவும், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் உரிய அனுமதிகளை வழங்குவதற்கு பசுமைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஏப்.30-ம் தேதி உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்