
பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்காக கடந்தபிப்ரவரி 26-ம் தேதி நிறைவேற்றப்பட்ட சிறப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதற்கு காரணமான ராமதாஸுக்கு பாமக,வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்துஅமைப்புகளின் சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இட ஒதுக்கீட்டுக்கான எல்லா புகழும் ராமதாஸையே சாரும். அவருக்கு பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் விரும்புகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்