
சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில், ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில், ‘ஜெம் லேப்ராஸ்கோபிக் - ரோபோட்டிக் குடலிறக்கம் - வயிறு மறுசீரமைப்பு சிகிச்சை மையம்’ தொடக்க விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனையின் தலைமைச் செயல் அதி
காரி மருத்துவர் எஸ்.அசோகன், இயக்குநர் மருத்துவர் பி.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்