
தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கி நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க உள்ளதாக, வங்கியின் தொடக்க தின விழாவில் தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.
தேசிய வேளாண்மை, ஊரக மேம்பாட்டு வங்கியின் (நபார்டு வங்கி) 40-வது தொடக்க தின விழா நேற்று நடைபெற்றது. இதில், தமிழக தலைமைச் செயலர் வெ.இறையன்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியபோது, ‘‘கடந்த நிதியாண்டில் தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு நபார்டு வங்கிரூ. 27,135 கோடி கடனுதவி வழங்கியது. நடப்பு நிதியாண்டில் ரூ.40 ஆயிரம் கோடி வழங்க உள்ளது’’ என்று தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்