
மேகேதாட்டு அணை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். கர்நாடக அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில், ‘காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பட வைப்போம், மேகேதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்துவோம்’ என்ற முழக்கங்களை முன்வைத்து இயக்கம் தொடங்கப்பட உள்ளது.இதற்கான விளக்கப் பிரசுரம் வெளியீட்டு நிகழ்ச்சி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. விளக்கப் பிரசுரத்தை ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் சுந்தர்ராஜன் வெளியிட, நீரியல் வல்லுநர் பேராசிரியர் ஜனகராஜன், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் தலைவர் செந்தூர் பாரி பெற்றுக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்