
தாரமங்கலம் இளமீஸ்வரர் கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கடந்த 5 ஆண்டுகளாக அகற்றாதது ஏன் என்பது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளமீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக தாரமங்கலம் கிராமத்தில் உள்ள நிலங்களை சில தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த நிலத்தில் அனுமதியுமின்றி கட்டிடங்களை கட்டி வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்