
திருவண்ணாமலை நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களாக அறிவிக்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேற்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தடுப்பூசி செலுத் திக் கொண்டவர்கள் எண்ணிக் கையை அதிகரிக்க தீவிர முயற்சி கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தி.மலை நகராட்சியில் 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நகராட்சியாக அறிவிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, நகராட்சியில் உள்ள 39 வார்டுகளில் உள்ள 39 வாக்குச்சாவடி மையங்கள் சிறப்பு முகாமாக மாற்றப்பட்டு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்