
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரோனா ஊரடங்கு தளர்வைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் (12-ம் தேதி) வார நாட்களில் அதிகாலை 5.30 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. நெரிசல் மிகுந்த நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்