
அரசுப் பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பின்னடைவு பணியிடங்களை விரைவாக நிரப்புவதுடன், மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான ஆதிதிராவிடர் நலத் துறையின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்தும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு நடத்தினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்