
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவரிடம், அப்பள்ளியின் ஆசிரியர் ஹபீப் முகம்மது(36) ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து முதுகுளத்தூர் போலீஸார் விசாரணை செய்து கடந்த ஜூன் 22-ம் தேதி ஆசிரியரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து பரமக்குடி கிளைச்சிறையில் அடைத்தனர். விசாரணையில் மாணவிகள் பலரிடம் ஆசிரியர் ஆபாசமாகப் பேசியது தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்