
வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி விவசாய நிலத்தில் நுழைந்ததால், 40 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை, நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானதால் விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதியிலும், நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால், வாணியம்பாடி யொட்டியுள்ள மண்ணாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்