
புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக் காலம் வரும் அக்டோபரில் முடிவடையவுள்ளதால் அப்பதவியை பெறப்போவது ஆளும் கட்சிக் கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸா, பாஜகவா, அதிமுகவா என்ற அடுத்த அரசியல் நகர்வு தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக ஆகியவை கூட்டணி அமைத்தன. தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் 15 தொகுதிகளிலும் அதிமுக 5 தொகுதிகளிலும் வென்றன. அப்போது அதிமுகவைச் சேர்க்காமல் சுயேச்சை எம்எல்ஏ விஎம்சி சிவக்குமார் ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சியமைத்து முதல்வரானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்