
புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் தொழிலாளர்களின் அரசு காப்பீட்டுக் கழகத்தின் (இ.எஸ்.ஐ.) மண்டல அலுவலகம் இயங்கி வருகிறது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் துறை அறிவுறுத்தலின்படி, மருத்துவக் காப்பீடு திட்டங்கள் இந்த அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவக் காப்பீடு எடுக்காத நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளை மிரட்டி இ.எஸ்.ஐ. அதிகாரிகள் லஞ்சம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக சென்னை சிபிஐ அலுவலகத்துக்கு புகார்கள் சென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்